இன்று மேலும் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிறைச்சாலைகளில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சிறைச்சாலை கொத்தணியில் இன்று (டிச-29) மேலும் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரையான தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 949 ஆக அதிகரித்து 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஆண்கைதிகள் 37 பேரும் பெண் கைதிகள் மூவருமாக இன்றைய தினம் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் 846 தொற்றாளர்களும், நியூ மகசின் சிறைச்சாலையில் 830 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு