Friday 19th of April 2024 12:07:05 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கை வந்த உக்ரேனிய சுற்றுலா  பயணிகள் மூவருக்கு கொரோனா!

இலங்கை வந்த உக்ரேனிய சுற்றுலா பயணிகள் மூவருக்கு கொரோனா!


அண்மையில் இலங்கை வந்த 185 உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளில் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் இன்று இதனை உறுதிப்படுத்தினார்.

தொற்று உறுதி செய்யப்பட்ட சுற்றுலாப் பயணிகள் அவர்கள் தங்கியிருந்த விடுதிகளில் அமைக்கப்பட்ட சிகிச்சை மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக டாக்டர் ஹேரத் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று நோயை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கை வர தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும் தொற்று நோயின் தீவிர பரவலுக்கு மத்தியிலும் நாட்டில் உள்ள சர்வதேச விமானங்கள் திறக்கப்பட்டு 9 மாதங்களின் பின்னர் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வர இலங்கை அரசு அனுமதியளித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக 185 உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் கடந்த 28-ஆம் திகதி இலங்கை வந்தனர்.

இந்நிலையில் இவ்வாறு வந்த சுற்றுலாப் பயணிகள் மூவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE