ஐரோப்பிய நாடான குரேஷியாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பலம் வாய்ந்த நில நடுக்கத்தால் பெருமளவும் கட்டங்கள் இடிந்து விழுந்தில் அவற்றில் சிக்கி குறைந்தது 7 பேர் பலியாகியுள்ளனர். 20-க்கு மேற்பட்டோர் காயமடைதுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிக்டர் அளவில் 6.4 –ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குரேஷியாவில் 1880 –க்குப் பின்னர் பதிவான மிக மோசமான நிலநடுக்கமாக இது அமைந்துள்ளது.
பெருமளவு கட்டங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
தலைநகர் ஜாக்ரெப்பின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பெட்ரிஞ்சா நகரில் இதனால் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. 20,000 பேர் வசிக்கும் இப்பகுதியில் இனியும் மக்கள் வாழ்வது பாதுகாப்பானதல்ல என்பதால் அனைவரும் வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தை அடுத்து இணையம், தொலைபேசி மற்றும் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் தொடர்பாடல்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
நில நடுக்கத்தின் தாங்கம் அண்டை நாடுகளான செர்பியா, போஸ்னியா, ஹெர்சகோவினா மற்றும் ஆஸ்திரிய தலைநகர் வியன்னா வரை உணரப்பட்டது.
நில நடுக்கத்தால் 7 பேர் உயிரிழந்ததை குரோஷிய பாதுகாப்பு அமைச்சர் டோமோ மெட்வெட் உறுதி செய்தார்.
அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப் படையினர் விரைந்து துரித மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் கட்டமாக இடிபாடுகளுக்குச் சிக்கி உயிருடன் உள்ளவர்களை மீட்கவும், காயமடைந்தவா்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, நிலநடுக்கத்தை அடுத்து ஸ்லோவேனியா மற்றும் குரேஷியா ஆகிய நாடுகளுக்கு சொந்தமான கர்ஷ்கோ அணுமின் நிலையமும் ஸ்லோவேனியாவால் மூடப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு மணி நேரதுக்குள் குரேஷியாவின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் பெட்ரிஞ்சா நகரில் ஏற்பட்ட சேதங்களைச் சென்று பார்வையிட்டனர்.
பெட்ரிஞ்சா நகரம் மனிதர்கள் வாழ இனிமேலும் பாதுகாப்பானது அல்ல என்றும் பிரதமர் ஆண்ட்ரே ப்லென்கோவிட்ச் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளனர். மக்கள் இனினும் இந்த நகரில் இருப்பது பாதுகாப்பானதல்ல என்பதால் அவா்கள் வேறு இடங்களுக்கு நகர்த்தப்படுவதாகவும் அவா் கூறினார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்