அருவியாற்றங்கரையில் வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் ஆற்றில் குளிக்க முற்பட்ட போது சுழிக்குள் அகப்பட்டு காணாமல் போன கிராம அலுவலகரை தேடும் பணி 2 ஆவது நாளகவும் இன்று புதன் கிழமை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எனினும் இதுவரை குறித்த கிராம அலுவலகர் கண்டு பிடிக்கப்படவில்லை. காணாமல் போன கிராம அலுவலகர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தோமஸ்புரி கிராம அலுவலகர் பிரிவில் கிராம அலுவலகராக கடமையாற்றும் ஜனார்த்தனன் (வயது-26) என தெரிய வந்துள்ளது.
இவ் அசம்பாவித்தில் காணாமல் போன கிராம சேவையாளரைத் தேடும் பணி 2 ஆவது நாளாக இன்று புதன் கிழமை காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடற்டை மற்றும் வங்காலை, அரிப்பு கிராம மீனவர்களும் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த ஆற்று பகுதியில் குளிக்கச் சென்று பலர் உயிரிழந்துள்ள நிலையில் அருவியாற்றில் குளிப்பது ஆபத்தானது என நானாட்டான் பிரதேச சபையால் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனையும் மீறி கிராம அலுவலகர்கள் உள்ளடங்களாக 6 பேரும் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
இந்த நிலையிலே குறித்த அனார்த்தம் இடம் பெற்றுள்ளது. காணாமல் போன கிராம அலுவலகரை தேடும் பணி தொடர்கின்றது.
நான்கு கிராம அலுவலகர்கள் உள்ளடங்களாக 6 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் ஆற்றில் குளிக்கும் போது சுழலில் சிக்கி ஒரு கிராம அலுவலகர் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்