இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவருமான சௌரவ் கங்குலி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சவுரவ் கங்குலி தனது வீட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் இன்று காலை பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் கொல்கத்தாவில் உள்ள வுட்லேண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்து.
அவருக்கு அங்கு அஞ்சியோபிளாஸ்டி (angioplasty) செய்ப்பட்ட பின்னர் ,இன்று மாலை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுவார் என மருத்துவமனை தரப்புக்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா