Tuesday 23rd of April 2024 01:23:34 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஆண்கள் இருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு: கொரோனா உயிரிழப்பு தொடர்ந்தும் அதிகரிப்பு!

ஆண்கள் இருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு: கொரோனா உயிரிழப்பு தொடர்ந்தும் அதிகரிப்பு!


இலங்கையில் ஆண்கள் இருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னதாக தெரிவித்துள்ளது.

கொழும்பு - 12 ஐச் சேர்ந்த 76 வயதுடைய ஆண், மருதானை பொலிஸ் பிரிவில் அடையாளம் காணப்பட்டிருந்த 70 தொடக்கம் 80 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் கொழும்பு - 13ஐச் சேர்ந்த 93 வயதுடைய பெண் ஒருவர் என மூவர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE