Thursday 25th of April 2024 03:46:05 PM GMT

LANGUAGE - TAMIL
.
இங்கிலாந்து கிறிக்கெட் அணியினர் இன்று இலங்கை வந்தடைந்தனர்!

இங்கிலாந்து கிறிக்கெட் அணியினர் இன்று இலங்கை வந்தடைந்தனர்!


இலங்கை அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று காலை இலங்கை வந்தடைந்தனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுடன் விசேட விமானம் மாத்தளை சா்வதேச விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்கியது.

ஜனவரி-14 ஆம் திகதி காலியில் முதலாவது டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதுவரை இங்கிலாந்து அணி வீரர்கள் ஹம்பாந்தோட்டையில் தங்கியிருந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

இவ்வாறு வருகைதந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி குழுவில் உள்ள 40 பேருக்கும் மத்தள விமான நிலையத்தில் வைத்து ரெபிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்பரிசோதனை அடிப்படையில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் விமானநிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE