பிரிட்டனில் வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸின் மரபணுவை பிரித்தெடுத்து இந்தியா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
பிரிட்டனில் கொரோனா வைரஸின் மரபணு மாற்றம் பெற்ற புதிய வைரஸ் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது உலகெங்கும் பல்வேறு நாடுகளில திரிபடைந்த புதிய வைரஸ் பரவி வருகிறது.
புதிய திரிபு கொரோனா வைரஸ் 70 வீதம் வேகமாகப் பரவக் கூடியது என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ள நிலையில் இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் புதிய கொரோனா வைரஸின் மரபணு குறித்து சா்வதேச அளவில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி பேரவை உலகில் முதல் முறையாக புதிய வகை கொரோனா வைரஸின் மரபணுவை தனியாகப் பிரித்தெடுத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தேசிய நுண்ணுயிரியல் ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.
பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்த கொரோனா நோயாளிகளின் மாதிரிகளில் இருந்து புதிய வகை வைரஸின் மரபணு பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நுண்ணுயிரியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய திரிவு வைரஸ் குறித்த ஆய்வுகளைத் துரிதப்படுத்த இந்திய விஞ்ஞானிகளின் இந்தச் சாதனை உதவும் எனக் கருதப்படுகிறது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா