Friday 29th of March 2024 07:20:32 AM GMT

LANGUAGE - TAMIL
-
மருதனார்மடம் சுத்திகரிப்பு நிலையம்; சென்றுவந்தவர்களுக்கு சிக்கலா?

மருதனார்மடம் சுத்திகரிப்பு நிலையம்; சென்றுவந்தவர்களுக்கு சிக்கலா?


யாழ்ப்பாணம் வடமராட்சி புலோலியைச் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மருதனார்மடம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்றவர்கள் சுகாதாரத் துறையினரை நாடவேண்டிய தேவை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வயிற்று நோவால் பாதிக்கப்பட்டநிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 26 வயதுடைய புலோலியைச் சேர்ந்த இளைஞர், தான் மருதனார்மடம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று வந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞர் சென்று வந்த சுத்திகரிப்பு நிலையத்திற்குச் சென்றுவந்தவர்கள் தங்களை அண்மையில் உள்ள பொதுச் சுகாதார உத்தியோகத்தகர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டிய தேவை உள்ளதாகவே கருதப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் நடந்துகொள்வது எதிர்காலத்தில் இவ்வாறான தொற்று அபாயம் ஏனையவர்களையும் தாக்காது காப்பதற்கு பாதுகாப்பாக அமையும் என்கின்றனர் நோக்கர்கள்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, பருத்தித்துறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE