முகக்கவசம் அணியாது நடமாடிய 300 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இவ்வாறு முகக்கவசம் அணியாது நடமாடிய 300 பேர் கட்டாய ரெபிட் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்டுபடுத்தப்பட்ட போதே அவர்களில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று (ஜனவரி-05) முதல் முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடுபவர்களுக்கு கட்டாய ரெபிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு