Tuesday 16th of April 2024 03:24:04 PM GMT

LANGUAGE - TAMIL
.
வவுனியா: படைப்புழு தாக்கத்தினால் 14 ஏக்கர் சோழப்பயிர்செய்கை முற்றிலும் சேதம்!

வவுனியா: படைப்புழு தாக்கத்தினால் 14 ஏக்கர் சோழப்பயிர்செய்கை முற்றிலும் சேதம்!


வவுனியா மாவட்டத்தில் சில மேட்டுப்பயிர் செய்யப்பட்ட இடங்களில் சோழப்பயிர் செய்கை முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் மேட்டுப்பயிர் செய்யப்பட்ட சோழப்பயிர்களை தற்போது அழித்து வரும் படைப்புழுவின் தாக்கத்தினால் கைவிட வேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலைவெளியிடுகினறனர்.

சுமார் 13 தொடக்கம் 14 ஏக்கர் வரையான சோழம் இம்முறை அழிவடைந்துள்ளது இதனால் மக்கள் இம்முரையிம் பாறிய ஒரு நஸ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக விவசாயிகளிடம் கேட்டப்போது.

நாம் வருடந்தோறும் மேட்டுப்பயிர் செய்கையை செய்து வருகின்றோம்.

அதே போன்று இம்முறையும் செய்தோம் இம்முறை கொஞ்சம் அதிகமாக செய்தோம் மொத்தமாக 14 ஏக்கர் சோழம் செய்யப்பட்டுள்ளது. நான் மாத்திரம் 4 ஏக்கர் சோழம் செய்துள்ளேன். உழவு கூலி சோழம் விதை மருந்து பசலை நடுகை கூலி எல்லாம் மொத்தம் ஒன்றரை இலச்சம் சிலவு இப்போது வரைக்கும் முடிந்துள்ளது.

இதனை அறுவடை செய்தால் 3 இலச்சம் ரூபாய் இலாபத்தை எடுத்திருப்போம் இந்த படைபுழு தாக்கத்தினால் முலுதும் அழிவடையும் நிலையில் உள்ளது.

இதனை கைவிட்டால் சிலவழித்ததும் வராது என் செய்வது என்று தெரிய வில்லை. எனவேத்தான் இது தொடர்பான அதிகாரிகள் பார்வையிட்டனர் இருந்தும் எமக்கு இந்த நஸ்டத்திற்கான ஒர் உதவி திட்டத்தை மானிய முறையில் தந்து உதவுவார்கள் என நம்புகின்றோம் என மக்கள் தெரிவித்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE