ஜனவரி இறுதிக்குள் பைசர் மற்றும் மொடர்னா நிறுவனங்களின் 10 இலட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகளை கனடா பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அதற்கான வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருவதாக நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவா் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு செப்டம்பர் இறுதிக்குள் தடுப்பூசி போட விரும்பும் அனைத்துக் கனேடியர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதுமான அளவு தடுப்பூசிகளை கனடா பெற்றுக்கொள்ளும் எனவும் பிரதமர் ட்ரூடோ கூறினார்.
கனடாவின் மக்கள் தொகை சுமார் 38 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மாகாணங்களின் கொரோனா தடுப்பூசிப் பணிகள் மந்த கதியில் உள்ளதால் கனேடியர்கள் விரக்தியடைந்துள்ளனர் எனக் குறிப்பிட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தடுப்பூசித் திட்டத்தை துரிதப்படுத்த மாகாணங்களுக்கு மத்திய அரசு உதவும் என்று கூறினார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா