Tuesday 23rd of April 2024 01:54:12 PM GMT

LANGUAGE - TAMIL
-
தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர்  காமராஜூக்கு கொரோனா தொற்று!

தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு கொரோனா தொற்று!


தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அமைச்சர் காமராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவாரூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார்.

ஏற்கெனவே தமிழக அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், துரைக்கண்ணு, செல்லூர் ராஜூ, நிலோஃபர் கபில், தங்கமணி என பலர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்பவும், தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றிடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம் தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE