Thursday 25th of April 2024 05:31:46 AM GMT

LANGUAGE - TAMIL
.
அமெரிக்க தலைமையகத்திற்குள் டிரம்பின் ஆதரவாளர்கள்  துப்பாக்கிகளுடன் நுழைந்து தாக்குதல்: பெண் பலி!

அமெரிக்க தலைமையகத்திற்குள் டிரம்பின் ஆதரவாளர்கள் துப்பாக்கிகளுடன் நுழைந்து தாக்குதல்: பெண் பலி!


அமெரிக்க தலைமையகமான வொசிங்டன் டிசியில் உள்ள கட்டிடத்திற்குள் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் துப்பாக்கியுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் வெற்றிபெற்றதாக, அமெரிக்க காங்கிரஸ் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவிருந்த நிலையில், இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஆயுதங்களுடன் பிரவேசித்த சிலர் அங்கு காவற்துறையினருடன் குழப்பகரமாக நடந்துக் கொண்டுள்ளனர்.

இதில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை அடுத்து காங்கிரஸின் கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.

ஜோர்ஜியாவில் ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்த குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இன்று மீண்டும் காங்கிரஸ் கூடி, தமது தீர்மானத்தை அறிவிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE