Friday 19th of April 2024 08:09:12 PM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியாவில் கஞ்சாவுடன் சட்டத்தரணி உட்பட மூவர் கைது!

வவுனியாவில் கஞ்சாவுடன் சட்டத்தரணி உட்பட மூவர் கைது!


வவுனியாவில் கேரள கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளம் சட்டத்தரணி உட்பட மூன்று பேரை பொலிசார் இன்று கைதுசெய்துள்ளனர்

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் சட்டத்தரணி ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சட்டத்தரணி கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருப்பதாக செட்டிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர் இதன்போது போது 700 கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர்.

இதனை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த இளம் சட்டத்தரணி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

இதேவேளை வவுனியா நகர் பகுதியில் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இரண்டுபேரை வவுனியா பிராந்திய போதைத்தடுப்பு பொலிசார் இன்றையதினம் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குறிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE