வவுனியா நகரில் வர்த்தகச் செயற்பாட்டாளர்கள் 54 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் வவுனியா நகர்ப்பகுதி வர்த்தகச் செயற்பட்டாளர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இதன் அடிப்படையில் இன்று வவுனியா - ஹொரவப்பொத்தானை வீதி முடக்கப்பட்டுள்ளது.
ரம்பைக்குளத்திலிருந்து மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டப் பகுதி, பஜார் வீதி உள்ளடங்கலான பகுதிகள் முடக்கப்பட்டு வர்த்தகச் செயற்பாட்டாளர்களுக்கு பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா