Thursday 25th of April 2024 08:01:29 AM GMT

LANGUAGE - TAMIL
-
முற்றாக முடங்கியது வவுனியா!

முற்றாக முடங்கியது வவுனியா!


யாழ் பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் காரணமாக வவுனியா மாவட்டமும் முடங்கியது.

வவுனியா நகரில் சில வியாபார நிலையங்கள் கொவிட்-19 தொற்றுகாரணமாக ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் ஏனைய வியாபார நிலையங்கள் பொதுச்சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.

நகரை அண்டிய பகுதிகளான பூந்தோட்டம்,குருமன்காடு கோவில்குளம், போன்ற இடங்களில் அனைத்து வியாபார நிலையங்களும் முழுமையாக மூடப்பட்டிருந்தது.

அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுபட்டிருந்தன.

வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த போதும் பொது மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. அத்தோடு பாடசாலைகள் நீண்ட இடைவெளிக்கு பின் ஆரம்பிக்கப்பட்ட போதும் மாணவர்களின் வரவு மிக மிக குறைவாக இருந்தமையால் பாடசாலைகளின் செயற்பாடுகளும் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.

MORE IMAGES
ADD HERE:
MORE IMAGES
ADD HERE:
MORE IMAGES
ADD HERE:


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE