மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனை எல்லை பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த தினத்தில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடத்திச் சென்று கட்டிவைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த தமிழ்ப் பண்ணையாளர்கள் ஆறு பேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனை எல்லை பகுதியில் அத்துமீறி சோளம் பயிற்ச் செய்கையில் ஈடுபட்டு வரும் சிங்கள பெரும்பான்மை இனத்தவர்கள் தமிழ்ப் பண்ணையாளர்களது குடியிருப்பு பகுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தியுதுடன் சின்னத்தம்பி பாஸ்கரன், முத்துப்பிள்ளை சேந்தன், சுப்பிரமணியம் கோணேசன், பரசுராமன் மேகுலன், கிருபைராசா ருச்சுதன், சண்முகம் டயன்சன் ஆகிய ஆறுபே கடத்திச் சென்று கட்டிவைத்து சித்திரவதை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு