Thursday 28th of March 2024 09:17:32 PM GMT

LANGUAGE - TAMIL
.
மட்டு ஓட்டமாவடியில் எழுமாற்று சோதனையில் மேலும் ஒருவருக்கு தொற்றுறுதி!

மட்டு ஓட்டமாவடியில் எழுமாற்று சோதனையில் மேலும் ஒருவருக்கு தொற்றுறுதி!


மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேசத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று ரெபிட் அன்டிஜன் பரிசோதனையில் மேலும் ஒருவருக்க தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தொன்னூறு (90) அன்டிஜன் பரிசோதனையில் ஒரு கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கனவே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களது உறவினர்கள் மற்றும் வீதிகளில் சுகாதார நடைமுறையை பேணாமல் முகக் கவசம் அணியாது பயணிக்கும் நபர்களுக்கு எழுமாறாக தொன்னூறு (90) பேருக்கு செய்யப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளர்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.நௌபர் வழிகாட்டலில் வீதிகளில் மற்றும் பேருந்துகளில் சுகாதார நடைமுறையை பேணாமல் முகக் கவசம் அணியாது பயணிக்கும் நபர்களை பிடித்து அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிப்பதனை தடுக்கும் நோக்கில் பிரதேச செயலகம், பிரதேச சபை, இராணுவத்தினர், பொலிஸார், வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் சுகாதார தரப்பினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் மேலும் தெரிவித்தார்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொடரச்சியாக வீதிகளில் சுகாதார நடைமுறையை பேணாமல் முகக் கவசம் அணியாது பயணிக்கும் நபர்களுக்கு எழுமாறாக அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் மேலும் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE