வவுனியாவில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மேலும் 24 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகளிலேயே குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டிருந்த பிசிஆர் பரிசோதனையில் 25 வர்த்தர்களுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட வர்த்தகர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட வர்த்தகர்களின் எண்ணிக்கை 54 ஆக காணப்பட்டிருந்த நிலையில் வவுனியாவில் தொற்றுக்குள்ளான வர்த்தகர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், வவுனியா