சட்டவிரோதமாக 21 மாடுகளை இரண்டு லொறிகளில் ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் சாரதிகள் இருவர் உட்பட மூன்று பேர் வாழைச்சேனைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் 15ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
பொலன்னறுவை பகுதியிலிருந்து அக்கரைப்பற்று பிரதேசத்தை நோக்கி பயணித்த இரண்டு லொறிகளை வாழைச்சேனைப் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது ஒரு லொறியில் பத்து மாடுகளும் மற்றைய லொறியில் பதினொரு மாடுகளும் காணப்பட்டுள்ளன.
இந்த மாடுகள் இட நெருக்கடியான நிலையில் வதையுடன் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு