மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய 21 சுகாதார துரையினருக்கு கொரோணா தொற்று ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி திருமதி க.கலாரஞ்சனி தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளுக்கு வருபவர்களை சுகாதார நடைமுறைகளை பேண வேண்டும் என்றும் பார்வையாளர்கள் ஒருவரே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் 15 நிமிடம் மாத்திர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வயோதிபர்கள், இருதய, சிறுநீரக நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்து வீட்டில் இருந்தே தொலைபேசியில் மருந்துகளைப்பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
Category: செய்திகள், புதிது
Tags: கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு