Friday 19th of April 2024 05:55:03 PM GMT

LANGUAGE - TAMIL
.
மன்னார் மாவட்டதில் தொடரும் மழை: மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!

மன்னார் மாவட்டதில் தொடரும் மழை: மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!


மன்னார் மாவட்டதில் கடந்த சில தினங்களாக தொடரும் சீறற்ற கால நிலை காரணமாக பெய்து வரும் மழையினால் மாவட்டத்தில் பல பாகங்களிலும் மழை நீர் நிறைந்து காணப்படுவதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக வெள்ளப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் விவசாய நிலங்களிலும் அதிக அளவு மழை நீர் தேங்கியுள்ளதால் அதிகளவான விவசயிகள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்சியாக மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ் நில கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் விவசாய செய்கையும் அழிவடைந்துள்ளது.

மன்னார் மாவட்ட விவசாய செய்கை அழிவு தொடர்பாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தரவுகளை சேகரித்து வருவதுடன் வெள்ளப் பாதிப்புக்கள் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் சேல்வேரி, தச்சினா மருதமடு போன்ற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மழை தொடரும் பட்சத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடதக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE