Friday 19th of April 2024 08:34:28 PM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியாவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 146 ஆக அதிகரிப்பு!

வவுனியாவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 146 ஆக அதிகரிப்பு!


வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 16பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் வவுனியாநகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகியது.

அதனடிப்படையில் வவுனியா மில் வீதியில் உள்ள வியாபாரநிலையங்களில் பணிபுரியும் 16 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது.

குறித்த எண்ணிக்கையுடன் வவுனியா நகர்பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 146 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE