Wednesday 24th of April 2024 08:13:50 AM GMT

LANGUAGE - TAMIL
-
மலேசியாவில் ஆகஸ்ட் -01 வரை  அவசரகால நிலை பிரகடனம்!

மலேசியாவில் ஆகஸ்ட் -01 வரை அவசரகால நிலை பிரகடனம்!


கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமாகிவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மலேசியாவில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் முஹிதின் விடுத்த கோரிக்கையை ஏற்று மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, அவசர நிலையை பிரகடனம் செய்தார்.

ஆகஸ்ட் -01 வரை நாட்டில் அவசர நிலை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

எனினும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் குறையுமானால் அறிவிக்கப்பட்ட காலப்பகுதிக்கு முன்னராகவே அவசரகாலச் சட்டம் நீக்கப்படும் என பிரதமர் முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் கொரோனா தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் மருத்துவமனைகள் சராசரியாக 70 வீதம் நோயாளிகளால் நிரம்பியுள்ளன.

இந்நிலையில் தொடர்ந்து தொற்று நோய் பரவல் அதிகரிக்குமானால் மருத்துவமனைகள் அவற்றின் திறனை இழக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் மலேசியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), மலேசியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE