Thursday 18th of April 2024 10:47:11 AM GMT

LANGUAGE - TAMIL
-
அமெரிக்காவில்  நேற்று ஒரே நாளில்  4,470 பேரை பலியெடுத்தது கொரோனா!

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 4,470 பேரை பலியெடுத்தது கொரோனா!


அமெரிக்காவில் இதுவரை இல்லாதளவு மிக அதிகமாக நேற்று ஒரே நாளில் 4,470 கொரோனா தொற்று நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் தொற்று நோயின் ஆரம்பத்தில் இருந்து இதுவரை கொரோனாவுக்கு ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

இதேவேளை, நேற்று மொத்தம் 235,000 புதிய தொற்று நோயாளர்கள் அமெரிக்காவில் உறுதிப்படுத்தப்பட்டனர்.

தற்போது, 131,000 பேர் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிய தொற்று நோயாளர்களுடன் அமெரிக்காவில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று நோயாளர் தொகை 2 கேடி 33 இலட்சத்து 69 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அத்துடன், கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இன்று புதன்கிழமை வரையான தரவுகளின்படி 3 இலட்சத்து 89 ஆயிரத்து 600-ஐ கடந்து அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடி 38 இலட்சத்து 16 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் கலிபோர்னியா, புளோரிடா மாகாணங்களில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு கொரோனா தடுப்பூசித் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE