இரணைமடுக்குளத்திற்கான நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்துவரும் நிலையில் தற்போது நீர்மட்டத்தின் அளவு 37 அடி 5 அங்குலமாக அதிகரித்துள்ளமையால் நீர் வெளியேற்றப்படும் அளவு அதிகரிக்கும் என்பதால் மக்களை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கோரிக்கைவிடுத்துள்ளது.
முரசுமோட்டை, கண்டாவளை, ஊரியான் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே 14 கதவுகள் திறக்கப்பட்டு நீர்வெளியேற்றப்பட்டுவரும் நிலையில் நீர் வெளியேற்றப்படும் அளவு அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிளிநொச்சி