முல்லைத்தீவு மாவட்டத்தில் சுவிஸ் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் நிதி உதவியில் 210 மாணவர்களிற்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொல்லவிளாங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைஇ பனிக்கன்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட குறிசுட்டகுளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைஇ பெரியகுளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் 210 மாணவர்களுக்கு இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தலா ரூபா 800.00 பெறுமதியான கற்றல் உபகரணங்களை சுவிஸ் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் நிதி உதவியில் வெளிச்சம் நிறுவனம் ஊடாக இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, சுவிட்சர்லாந்து, வட மாகாணம், முல்லைத்தீவு