முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் வடக்கு கருநாட்டுக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் உள்ள குடியிருக்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் நிரம்பி உள்ளது இதனால் குறித்த பகுதிகளில் உள்ள மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமக்கு எந்தத் தரப்பினரும் உதவ முன்வரவில்லை என மக்கள் அதிர்ப்தி வெளியிடுகின்றனர்.
தொடர்ந்தும் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ள தமக்கு அதிகாரிகள் உதவ முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.
Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், முல்லைத்தீவு