சிறைச்சாலை கொத்தணியில் கொரோனாத் தொற்று காரணமாக எண்மர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 4 ஆயிரத்து 274 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சிறைச்சாலைகளில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து உருவாகிய சிறைச்சாலை கொத்தணியல் இதுவரை 4 ஆயிரத்து 274 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகர சிறைச்சாலையில் கொரோனாத் தொற்று காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புடன் சிறைச்சாலை கொத்தணியில் எண்மர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை சிறைச்சாலை கொத்தணியில் கொரோனாத் தொற்று உறுதியான நிலையில் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தவர்களது எண்ணிக்கை 3 ஆயிரத்து 850 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை