ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்க நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அகிலவிராஜ் காரியவசம் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று கூடியது. இதன்போது புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை ரவி புறக்கணித்திருந்தார்.
இந்தநிலையிலேயே அவரிடமிருந்து உப தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.