Thursday 18th of April 2024 11:04:01 PM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் 154பேர் தொடர்ந்தும் சிகிச்சை!

கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் 154பேர் தொடர்ந்தும் சிகிச்சை!


கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் 154பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோயியல் வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொவிட்19 சிகிச்சை நிலையத்தில் 154 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் 96 ஆண்களும், 58பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 5-13 வயதுடையவர்கள் இருவரும், 65 வயதுக்கு மேற்பட்டவர்வர்கள் ஏழுபேரும் அடங்குவதுடன் ஏனையோர் இடைவயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த சிகிச்சை நிலையத்திலிருந்து சிகிச்சை பெற்று 18 பேர் வெளியேறுவதாக குறித்த வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் 19 சிகிச்சை நிலையமாக கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் அமைந்துள்ள தொற்று நோய் வைத்தியசாலையில் சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE