Tuesday 16th of April 2024 08:33:17 AM GMT

LANGUAGE - TAMIL
-
655 வீரர்கள், 800 காளைகள் பங்கேற்புடன்  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பு!

655 வீரர்கள், 800 காளைகள் பங்கேற்புடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பு!


மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வருடந்தோரும் பொங்கலை ஒட்டி நடத்தப்படும் உலகப் புகழ் பெற்ற ஜல்லிகட்டு போட்டி இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

முதல் காளையாக அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் காளைக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று 655 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். 800 காளைகளும் களமிறங்குகின்றன.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு கார்கள் பரிசளிக்கப்படவுள்ளன.

இதனைத் தவிர சிறப்பாக காளையடக்கும் வீரர்களுக்கு மேலும் பெறுமதியான பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

இதேவேளை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் பங்குபெறும் நிலையில் அப்பகுதியில் 3,000-க்கும் அதிகமான பொலிஸார் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாட்டுப் பொங்கல் நாளான நேற்று மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக இடம்பெற்று முடிந்தது.

இந்த போட்டியில் 18 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரரும் பொறியியல் கல்லூரி மாணவருமான கார்த்திக்கு என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE