Thursday 18th of April 2024 10:49:35 PM GMT

LANGUAGE - TAMIL
-
திருமலையின் பாலையூற்று பூம்புகார் கிழக்கு முடங்கியது!

திருமலையின் பாலையூற்று பூம்புகார் கிழக்கு முடங்கியது!


திருகோணமலை பாலையூற்று பூம்புகார் கிழக்கு பகுதியில் அதிகமான கொரோணா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டதை அடுத்து இன்று காலை முதல் குறித்த பகுதியானது எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நேற்றையதினம் 13 கொரோணா தொற்றாளர்களும் இதற்கு முன்னர் 7 தொற்றாளர்களுமாக மொத்தமாக 20 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த பகுதியினுள் செல்லுதல் மற்றும் வெளியேறுதல் என்பன பாதுகாப்பு துறையினரால் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் திருகோணமலை மாவட்டத்தின் நகர சுத்திகரிப்பு தொழிலாளர்கள் அதிகம் வாழ்ந்து வருவதால் இது திருகோணமலைக்கான ஒரு கொத்தணி ஆக உருவாகக்கூடும் எனும் அச்சமும் மக்கள்மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மேலும் நாளாந்தம் திருகோணமலை மாவட்டத்தில் கொரோணா தொற்றாளர்களது எண்ணிக்கை அதிகரிப்பதை எம்மால் அவதானிக்கக் கூடியதாக உள்ள போதிலும், கடந்த சில நாட்களாக சுகாதார தரப்பினரிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை பெறுவதில் சிக்கல் நிலை காணப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE