வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 4பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் வவுனியாநகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகியது.
அதனடிப்படையில் வவுனியா மற்றும் குருமன்காடு பகுதிகளில் உள்ள வியாபாரநிலையங்களை சேர்ந்த 4 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது.
குறித்த எண்ணிக்கையுடன் வவுனியா நகரகொத்தணி கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 175 ஆக அதிகரித்துள்ளது
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா