சீனாவில் தயாரிக்கப்பட்ட 4,800-க்கும் மேற்பட்ட ஐஸ்கிறீம் பெட்டிகளில் கொரோனா வைரஸ் உள்ளடங்கிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஐஸ் கிறீமில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து சீனாவின் டியன்ஜின் மாநகராட்சியில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலையின் அனைத்து ஐஸ்கிறீம்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு, அந்த தொழிற்சாலை முடக்கப்பட்டுள்ளது.
எனினும் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னரே 65 ஐஸ்கிறீம் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவற்றை வாங்கி உட்கொண்டவர்களைக் கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், இந்த ஐஸ்கிறீம் தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் 1,662 பேர் சுய-தனிமைப்படுத்தபட்டு, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
இந்த தொழிச்சாலைக்கு நியூசிலாந்தில் இருந்தும், உக்ரைனில் இருந்தும் பால் பவுடர் இறக்குமதி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
ஐஸ்கிறீம் தொழிற்சாலையில் வேலை செய்துவந்த யாரேனும் ஒருவரிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐஸ்கிறீமில் மனித தொடர்புகளிலிருந்து கொரோனா பரவியிருக்கலாம் என லீட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துண்ணுயிரியல் நிபுணர் டாக்டர் ஸ்டீபன் கிரிஃபின் தெரிவித்துள்ளார்.
ஐஸ்கிறீம் பாலில் இருந்து தயாரிக்கப்பட்டு உறை குளிரில் சேமிக்கப்படுவதால் அவற்றில் வைரஸ் எளிதாக உயிர்வாழும். எனினும் அனைத்து ஐஸ்கிறீம்களிலும் கொரோனா இருக்கும் என நாம் அச்சமடையத் தேவையில்லை எனவும் டாக்டர் ஸ்டீபன் கிரிஃபின் குறிப்பிட்டார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா