கொரோனாத் தொற்று பரம்பல் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வைகயில் உடன் அமுலாகும் வகையில் மேலும் ஐந்து பிரதேசங்கள் முடக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மினுவங்கொட மற்றம் மாத்தளை பொலிஸ் பிரிவுகளின் 05 பிரதேசங்கள் உடன் அமுலாகம் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மினவங்கொட பொலிஸ் பிரிவின் கிழக்கு கல்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் மேற்கு கல்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோன்று மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரகாமுர கிராம உத்தியோகத்தர் பிரிவு மீதெனிய கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் தெஹிபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை