Friday 29th of March 2024 07:15:05 AM GMT

LANGUAGE - TAMIL
.
நாடாளுமன்ற தொற்று எண்ணிக்கை 09 ஆக அதிகரிப்பு!

நாடாளுமன்ற தொற்று எண்ணிக்கை 09 ஆக அதிகரிப்பு!


இலங்கை நாடாளுமன்ற பணிக்குழாமினரிடையே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தொற்றுறுதியானவர்களது எண்ணிக்கை 09 ஆக அதிகரித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் தரப்பினருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னணியில் நாடாளமன்ற பணிக்குழாமினரை பிசிஆர் பரிசோதனைக்குஉட்படுத்தும் விசேட வேலைத்திட்டம் கடந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 13 மற்றும் 15ம் திகதிகளில் நாடாளுமன்ற வளாத்தில் இடம்பெற்ற இவ் விசேட செயற்திட்டத்தில் நாடாளுமன்டற உறுப்பினர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற பணிகுழாமினர் 943 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான உயிரியல் மாதிரிகள் பெறப்பட்டிருந்தன.

தற்போதைய நிலையில் நாடாளுமன்ற பணிக்குழாமினர் ஐவருக்கும், நாடாளுமன்ற பாதுகாப்பு பிரிவு அதிகரிகள் நால்வருக்கும் என 09 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக நாடாளுமன்றத்தில் சேவையாற்றும் ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE