படையினரின் தேவைக்காக காணி சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மண்டைதீவில் அரசியல் பிரமுகர்களும் மக்களும் சற்று முன்னர் ஒன்று கூடினர்.
மண்டைதீவிலும் மண்கும்பானிலும் இன்று நில அளவைத் திணைக்களத்தினர் இன்று காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தன.
இந்நிலையிலேயே இன்று மண்டைதீவில் அரசியல் பிரமுகர்களும் மக்களும் ஒன்று கூடியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராசா கஜேந்திரன், சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், உள்ளடங்கலாக பெருமளவானவர்கள் அங்கு திரண்டுள்ளதுடன் பேரணியாகவும் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தின் பின்னர் மண்கும்பானிலும் போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் அழைப்பு விடுத்திருந்தார்.
மண்டைதீவில் மக்கள் கூடியபோதிலும் 9.15 மணிவரையில் மண்டைதீவிற்கு நிலஅளவைத் திணைக்களத்தினர் பிரசன்னமாகியிருக்கவில்லை என்று அருவியின் பிராந்திய செய்தியாளர் அங்கிருந்து தெரிவிக்கின்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்