Thursday 28th of March 2024 06:59:42 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கை அரசியல் அரங்கில் ஆட்டத்தை தொடரும்  கொரோனா: மற்றுமொரு இராஜாங்க அமைச்சரையும் தாக்கியது!

இலங்கை அரசியல் அரங்கில் ஆட்டத்தை தொடரும் கொரோனா: மற்றுமொரு இராஜாங்க அமைச்சரையும் தாக்கியது!


இலங்கை அரசியல் தரப்பில் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள கொரோனா மற்றுமொரு இராஜாங்க அமைச்சரையும் தொற்றியுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி அறநெறி பாடசாலைகள், கல்வி சேவைகள், பாடசாலைகள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக மேலம் தெரிவிக்கபட்டுள்ளது.

துரித ரெபிட் அன்டிஜன் பரிசோதனை மூலம் இத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக அமைச்சர் வாசுதேவ நாயணக்கரவுக்கும், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமிற்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE