இலங்கை அரசியல் தரப்பில் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள கொரோனா மற்றுமொரு இராஜாங்க அமைச்சரையும் தொற்றியுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி அறநெறி பாடசாலைகள், கல்வி சேவைகள், பாடசாலைகள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக மேலம் தெரிவிக்கபட்டுள்ளது.
துரித ரெபிட் அன்டிஜன் பரிசோதனை மூலம் இத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக அமைச்சர் வாசுதேவ நாயணக்கரவுக்கும், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமிற்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை