Tuesday 16th of April 2024 12:25:24 AM GMT

LANGUAGE - TAMIL
.
போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய பொலிஸ் பரிசோதகர் வசமாக சிக்கினார்!

போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய பொலிஸ் பரிசோதகர் வசமாக சிக்கினார்!


போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அநுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் 43 வயதுடைய அதிகாரி ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து சந்தேகத்துக்கிடமான 5 கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட குறித்த நபரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாகப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் கூறினார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE