தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்தவர்கள் முன்னெடுத்து வரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை கைவிடுமாறு வடக்கு மாகாண கூட்டுறவு மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் கோரிய போதும் ஒரு தீர்வு கிடைக்கும் வரை கைவிடப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பனை தென்னை வளகூட்டுறவுச் சங்கத்தின் இரண்டு அங்கத்தவர்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நேற்றைய தினம் ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருந்தனர்.
இந் நிலையில் நேற்று பகல் வடக்கு மாகாண மகளிர் விவகார மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இருவரையும் சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு தாங்கள் இதற்கான தீர்வை பெற்றுத்தருவதாக கூறி இருந்தார்.
இருந்தபோதும் தமது கோரிக்கைக்கான தீர்வு கிடைக்கும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் நேற்று மாலை 5 மணிக்குள் தனக்கான தீர்வைப் பெற்றுத் தருமாறும் கோரியிருந்தனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி