சர்வதேச அளவில் விரைவில் வாரத்துக்கு ஒரு இலட்சம் என்ற அளவுக்கு கொரோனா மரணங்கள் உயரும் என உலக சுகாதார அமைப்பின் அவசர கால தலைமை நிபுணர் மைக் ரியான் எச்சரித்துள்ளார்.
கடந்த வாரம் 93 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஜெனீவாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவா் சுட்டிக்காட்டினார்.
தற்போது உலகெங்கும் இடம்பெறும் கொரோனா மரணங்களில் 47 வீதம் அமெரிக்காவில் மட்டும் பதிவாகிவருவதாகவும் மைக் ரியான் தெரிவித்தார்.
ஐரோப்பாவிலும் கொரோனா மரணங்கள் தொடர்ந்தும் அதிகளவில் பதிவாகி வருவதாகவும் அவா் குறிப்பிட்டார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்