Thursday 18th of April 2024 05:39:56 PM GMT

LANGUAGE - TAMIL
-
திருகோணமலை பட்டினமும் சூழலும்  பிரதேச சபையின் ஆட்சி ஶ்ரீலங்கா பொதுஜனபெரமுன வசமானது!

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் ஆட்சி ஶ்ரீலங்கா பொதுஜனபெரமுன வசமானது!


கடந்த 25 வருட காலத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வசமிருந்த திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் ஆட்சி ஶ்ரீலங்கா பொதுஜனபெரமுன வசமானது.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் புதிய தவிசாளர் சந்துன் ரத்நாயக்க இன்று தன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்று (19) காலை சுப வேளையில் ஒப்பமிட்டு தனது கடமைகளை திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந் நிகழ்வில் சமயத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு இருந்த நிலையில் புதிய தவிசாளருக்கான தெரிவு உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட திறந்த வாக்கெடுப்பின்போது ஶ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் சந்துன் ரத்னாயக்க அவர்கள் புதிய தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE