யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்திருந்த பௌத்த விகாரை சேதமாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் கிளிநொச்சிக்கு அனுப்பட்டுள்ளன.
கிளிநொச்சி வாளகத்தில் உள்ள விகாரை கடந்த 13-ஆம் திகதி இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இந்து, பௌத்த, சிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத தலங்கள் அமைந்துள்ளன.
எனினும் பௌத்த விகாரை பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுப் புதுப்பொலிவுடன் காணப்படுகின்றது. இந்நிலையிலேயே இந்த விகாரை சேதமாக்கப்பட்டுள்ளது.
அண்மையில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தடிக்கப்பட்டது. இதற்குப் பதிலடியாக பௌத்த விகாரை சேதமாக்கப்பட்டிருக்கலாம் என தென்னிலங்கையில் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனையடுத்தே இது குறித்த விசாரணைக்காக 4 விசேட பொலிஸ் குழுக்ககள் கிளிநொச்சி அனுப்பப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் இந்துக்களில் ஆலயம் அரச அதிகாரிகள் துணையுடன் இடித்தழிக்கப்பட்டு அங்கு புத்தர் நேற்று குடியேற்றப்பட்டதுடன், அமைச்சர் பங்கேற்புடன் அங்கு அகழ்வாராய்ச்சிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி