ஆர்ஜென்டினாவில் இன்று செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியுள்ளது.
சான் ஜுவான் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கதின் அதிர்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் உணரப்பட்டன. கட்டடங்கள் குலுங்கின. எனினும் உயிர்ச்சேதங்கள் ஏதும் பதிவாகவில்லை என ஆர்ஜென்டினா தேசிய பேரிடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
நியூவே டி ஜூலியோவின் தென்மேற்கே 27 கிலோமீட்டர் தொலைவில் முதலில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் பதிவான இடத்திலிருந்து கிழக்கே 1,000 கிலோமீற்றர் தொலைவில் இரண்டாவது பாரிய நில நடுக்கம் பதிவானது.
தொடர்ந்து 4.9, 5.0 மற்றும் 5.3 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து பதிவாகின.
நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) அறிவித்துள்ளது.