Thursday 28th of March 2024 11:51:47 PM GMT

LANGUAGE - TAMIL
.
269 பேர் இலங்கைக்கு வருகை: மேலும் 340 பேர் இன்று வருகைதரவுள்ளனர்!

269 பேர் இலங்கைக்கு வருகை: மேலும் 340 பேர் இன்று வருகைதரவுள்ளனர்!


இலங்கையிலம் உலகளவிலும் கொரோனாத் தொற்று கட்டுக்கடங்காது அதிகரித்து வரும் நிலையில் இன்றைய தினம் 269 பேர் இலங்கைக்கு வருகைதந்துள்ளதுடன் மேலும் 340 பேர் வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டார் நாட்டிலிருந்து 110 பேரும், சவூதியிலிருந்து 76 பேரும், இந்தியாவில் இருந்து 55 பேரும், மாலை தீவில் இருந்து 28 பேரும் இவ்வாறு இன்று அதிகாலை வருகை தந்துள்ளதாக கொவிட் - 19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்றைய தினத்திற்குள் 340 பேர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். தென் கொரியாவிலிருந்து 285 பேரும், சவுதியிலிருந்து 21 பேரும், சீனாவில் இருந்து 23 பேரும், சிங்கப்பூரில் இருந்து 3 பேரும், பங்களாதேஷிலிருந்து இருவரும், மாலை தீவில் இருந்து 6 பேரும் இவ்வாறு வருகை தரவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE