Thursday 28th of March 2024 02:48:47 PM GMT

LANGUAGE - TAMIL
.
இராஜாங்க அமைச்சு ஒன்றின் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா!

இராஜாங்க அமைச்சு ஒன்றின் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா!


தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சில் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சில் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து குறித்த அமைச்சு அலுவலகம் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அதற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சு அலுவலகம் மூடப்பட்டதான செய்தி உண்மைக்கு புறம்பானதென்று குறித்த அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சின் ஊழியர்கள் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த தொற்றாளர்கள் மேலதிக சுகாதார நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை இணங்காணும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE