தனது பதவிக் காலத்துக்கு இன்றும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியேறினார்.
அமெரிக்க ஜனாதிபதியாக இன்னும் சற்று நேரத்தில் ஜே பைடன் பொறுப்பேற்கவுள்ள நிலையில் அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ட்ரம்ப் வெளியேறிச் சென்றார்.
21 குண்டுகள் முழங்க வெள்ளை மாளிகையில் இருந்து அவர் வழியனுப்பி வைக்கப்பட்டார்.
வெள்ளை மாளிகையில் இருந்து ஹெலிகப்டரில் அருகில் உள்ள அண்ட்ரூஸ் தளத்துக்குச் சென்ற ட்ரம்ப், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போது ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் பைடனுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கிருந்து அவர் விமானப் படை விமானத்தில் தனது சொந்த ஊராக புளோரிடா சென்று அங்கு குடியிருக்கவுள்ளார்.
இந்நிலையில் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் வொஷிங்டனில் நடைபெறும் எளிமையான நிகழ்வில் பதவியேற்பார்.
அவருடன் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹரிஸ் பதவியேற்கவுள்ளார்.