கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரில் ஒரு பகுதி இன்று பி.பகல் 06.00 மணி முதல் முடக்கப்படுவதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ள நிலையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று (ஜன-21) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் விடுவிக்கப்படவுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்று மாலை முதல் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள் வருமாறு,
காத்தான்குடி பொலிஸ் பிரிவு
165 காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு 3
165 ஏ, காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு மேற்கு
165 பீ, காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு கிழக்கு
166 காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு 2
166 ஏ, காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு வடக்கு
167 ஏ, காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு வடக்கு
167 பீ, காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு கிழக்கு
167 டி, புதிய காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு மேற்கு
பண்டாரகம / அட்டுலுகம
660 ஏ எபிடமுல்ல கிராம சேவகர் பிரிவு
659 பீ பமுணுமுல்ல கிராம சேவகர் பிரிவு
மொனராகல / படல்கும்புர
அளுபொத கிராம சேவகர் பிரிவு
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசடி கிராம சேவகர் பிரிவு இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு